மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
![மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/717079-accident.webp)
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ராணுவவீரர் பலியானார்.
அணைக்கட்டு
மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ராணுவவீரர் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அருகே பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகன் திருநாவுக்கரசு (வயது 23), லாரி டிரைவர். இவர் குடியாத்தத்தில் உள்ள முதலாளியின் வீட்டு கிரக பிரவேசத்தில் கலந்து கொள்ள நேற்று காலை சென்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் மோட்டார்சைக்கிளில் பகல் 12 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.