சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்


சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
x

சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

சாரல் மழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தொடர் விடுமுறை என்பதால் இந்த கோவிலுக்கு நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலை முதலே வருகை தந்தனர். இந்நிலையில் அதிகாலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காலை 11.50 மணி அளவில் வனப்பகுதியில் திடீரென பெய்த சாரல் மழையால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வனத்துறை கேட் மூடப்பட்டது.

அனுமதி இல்லை

இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு காத்திருந்தனர். இந்த சாரல் மலையானது 15 நிமிடங்கள் பெய்தது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரப் பகுதிக்கு வந்த வனப்பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி பக்தர்கள் வந்தனர்.

இதையடுத்து வனத்துறை கேட்டின் முன்பு காத்திருந்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பக்தர்கள் ஏமாற்றத்துடன் வனத்துறைகேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்து திரும்ப சென்றனர்.


Next Story