சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை, இணை செயலாளர் மரகதம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ருக்மணி வரவேற்றார். அனைத்துத்துறை ஓய்வூதிய ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார்.

தர்ணா போராட்டத்தில், காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story