தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளின் குறுக்கே சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் நகரில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிக்குமார், சிவகாசி.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி எம்.டி.ஆர். நகர், வசந்தம் நகர், ஜோதிபுரம் வழியாக செல்லும் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, அருப்புக்கோட்டை.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மேல தெரு பகுதியில் தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், விருதுநகர்.

குண்டும், குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சங்கம்பட்டி கிராமத்திலிருந்து ஆப்பனூர் வழியாக அழகாபுரி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகிருஷ்ணன், ராஜபாளையம்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தாயில்பட்டி, ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக வீடுகள் மற்றும் திறந்தவெளிகளில் பட்டாசு தயாரிக்கின்றனர். இதனால் வெடிவிபத்துகள் ஏற்படும் விபரீதம் உள்ளது. எனவே தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட விரோதமாக பட்டாசுகள் உற்பத்தி செய்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிமுருகன், விருதுநகர்.


Next Story