விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

கோவில்பட்டியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார் தலைமையில் விவசாயிகள் ரங்கசாமி, மாரியப்பன், பொன்ராஜ் உள்பட விவசாயிகள் பலர் வந்தனர்.

அவர்கள் திடீரென்று அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2020-21-ம் ஆண்டுக்கான விடுபட்ட பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு விரைவில் வழங்க வேண்டும். தரமற்ற விதைகள் விற்பனையை தடுத்து, தரமான விதைகளை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து அவர்களுடன், உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கடந்த 25-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தோம். அப்போது செப்டம்பர் 1-ந் தேதி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கலெக்டர் வாய் மொழியாக தெரிவித்தார். அதனை நம்பி இங்கே வந்தோம். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை. எங்களுக்கு எப்போது பேச்சுவார்தை நடைபெறும் என்பதை எழுத்து பூர்வமாக கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாலை சுமார் 3 மணியளவில் உதவி கலெக்டர் மகாலட்சுமி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


Next Story