ராஜாக்கமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


ராஜாக்கமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

ஈத்தாமொழி அடுத்து உள்ள தெற்கு சூரங்குடி மணியன்விளையை சேர்ந்தவர் கோசலை (வயது60). இவர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை சகோதரி பராமரித்து வந்தார். இந்த நிலையில் கோசலை நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலையில் அவரது அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை.

இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கோசலை தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி ெகாண்டிருந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story