தூக்குப்போட்டு பெண் தற்கொலை;வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் விபரீதம்


தூக்குப்போட்டு பெண் தற்கொலை;வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் விபரீதம்
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:46 PM GMT)

கன்னியாகுமாி அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமாி அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீனவர் மனைவி

கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜேசுராயப்பன் (வயது 60), மீனவர். இவருடைய மனைவி விஜயா (57). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்தது. மேலும், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் விஜயா அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால், கடந்த சில நாட்களாக விஜயா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் விஜயா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் விஜயா தற்கொலை செய்து கொண்டதை கண்ட குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து இதுபற்றி விஜயாவின் கணவர் ஜேசு ராயப்பன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story