தூத்துக்குடியில் முதல்நாள் கடலில்மீன்பாடு குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம்


தூத்துக்குடியில் முதல்நாள் கடலில்மீன்பாடு குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் முதல்நாள் கடலில் மீன்பாடு குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று அதிகாலையில் மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 247 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கரைக்கு திரும்பி வரத் தொடங்கினர். இதில் விளமீன், ஷீலா, ஊளி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பிடிபட்டு இருந்தன. ஆனாலும் மீனவர்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவே மீன்பாடு இருந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஆனாலும் விசைப்படகுகள் கடலுக்கு சென்று திரும்பி உள்ளதால் மீன்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story