கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x

கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு முறையே 10, 10 மற்றும் 6 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும், அதிகபட்சமாக 65 சதவீதமாகவும் இருக்கும்.

ஈக்கள் தொல்லை

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்து கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய் சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும் உயர்மனைகளில் (கோழிப்பண்ணை) பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும்.

இதேபோல் சமீப காலமாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால், ஈக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்ப வெப்பநிலை நிலவுகிறது. அதனால் கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிகமாகி உள்ளது. பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து, அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறையை கையாளுவது மிகவும் சிறந்ததாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story