செல்போன் விளையாட்டால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை


செல்போன் விளையாட்டால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை
x

ஊஞ்சலூர் அருகே செல்போன் விளையாட்டால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

ஊஞ்சலூர்:

ஊஞ்சலூர் அருகே செல்போன் விளையாட்டால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-2 மாணவர்

ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு மணக் காட்டுப் புதூரை சேர்ந்தவர் ரவி (வயது 55). அவருடைய மனைவி பெயர் வெண்ணிலா (49). இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஹரிபிரகாஷ் என்ற மகன் இருந்தார். இவர் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் வேலைக்கு சென்ற ரவி நேற்றுமுன்தினம் மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது ஹரிபிரகாஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் விஷம் குடித்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி உடனே ஹரிபிரகாசை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிபிரகாஷ் நேற்று முன்தினம் இ்ரவு இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், 'ஹரிபிரகாஷ் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு்ள்ளது. இந்தநிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை ெசய்து கொண்டார்' என்பது தெரியவந்தது.


Related Tags :
Next Story