பட்டாசு ஆலைகளை அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை


பட்டாசு ஆலைகளை அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை
x

பட்டாசு ஆலைகளை தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

பட்டாசு ஆலைகளை தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில், 8 பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு, தமிழக அரசு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இனியும் இது போன்ற வெடி விபத்துக்கள் நடக்காமல் தடுக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அதற்கான பயிற்சியையும் பட்டாசு ஆலைகள் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவற்றை உரிய முறையில் கண்காணித்து, தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.



Next Story