பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை


பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி அருகே நோய் குணமாகாததால் மனமுடைந்த பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே நோய் குணமாகாததால் மனமுடைந்த பட்டதாரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி இளம்பெண்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் சுந்தரலிங்கம், இவரது மகள் ராதா (வயது25). இவர் பி.எஸ்.சி. பயோகெமிஸ்ட்ரி படித்துள்ளார். இவருக்கு தைராய்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நோய்க்கு அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அண்ணன் வீட்டுக்கு வந்தார்

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக்நகர் குடியிருப்பில் வசிக்கும் அவருடைய அண்ணன் செந்தில்வேல் வீட்டிற்கு அவர் வந்திருந்தார். அங்கு வீட்டில் யாருடனும் பேசாமல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் வெளியே இருந்த நிலையில், படுக்கை அறை கதவை உள் புறமாக பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அண்ணன் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, படுக்கை அறை கதவு பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

சத்தம் கொடுத்தும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story