கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று குரூப்-2 தேர்வை 24,417 பேர் எழுதுகிறார்கள்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று குரூப்-2 தேர்வை 24,417 பேர் எழுதுகிறார்கள்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வை 24 ஆயிரத்து 417 பேர் எழுதுகிறார்கள். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2 போட்டி தேர்வு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கிருஷ்ணகிரியில் 11,349 பேரும், ஓசூரில் 7,790 பேரும், போச்சம்பள்ளியில் 5,278 பேரும் என மொத்தம் 24,417 பேர் குரூப்-2 தேர்வு எழுத உள்ளனர்.

பறக்கும் படை

இந்த தேர்வை கண்காணிக்க, 78 முதன்மை கண்காணிப்பாளர்கள், 6 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு உள்ளது. மேலும் 20 நடமாடும் அலகு, 156 ஆய்வு அலுவலர்கள், 78 வீடியோ கிராபர்கள், 23 ஆயுதம் ஏந்திய போலீசார், 78 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணைய பிரிவு அலுவலர் நாராயணன், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story