வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவரின் பிறந்தநாளுக்கு மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முன்னாள் முதல்-மந்திரிகள் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் வாழ்த்திய அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வாழ்த்து மடல்கள் - பூங்கொத்துகள் அனுப்பியும், சமூக வலைத்தளங்களிலும் என உள்ளன்போடு எனது 70-ஆவது பிறந்தநாளில் வாழ்த்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சிமிகு நன்றிகள்!" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எராளமானோர் பங்கேற்றனர்.


Next Story