10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 Dec 2023 11:18 PM GMT (Updated: 8 Dec 2023 6:11 AM GMT)

தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி சென்ற 'மிக்ஜம்' புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக மழை குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று (08-12-2023) முதல் நாளை மறுதினம் (10-12-2023) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story