தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு


தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 2 Nov 2023 12:28 PM GMT (Updated: 2 Nov 2023 12:56 PM GMT)

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதனால் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story