பெரியகுளத்தில் நர்சு வீட்டில் 6 பவுன் நகை திருட்டு


பெரியகுளத்தில் நர்சு வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
x

பெரியகுளத்தில் நர்சு வீட்டில் 6 பவுன் நகை திருடுபோனது.

தேனி

பெரியகுளம் தென்கரை, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசமணி (வயது 38). இவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். தனது மகனை கல்லூரியில் சேர்ப்பதற்காக அரசமணிக்கு பணம் தேவைபட்டது.

இதையடுத்து தனது நகையை அடகு வைக்க அவர் முடிவு செய்தார். அதன்படி, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகையை தேடி பார்த்தார். ஆனால் அது மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசமணி, நகை திருடுபோனது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story