ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கேரள மீனவர் மாயம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க ெசன்ற கேரள மீனவர் மாயமானார்.
குளச்சல்,
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடிக்க ெசன்ற கேரள மீனவர் மாயமானார்.
விசைப்படகில் சென்றனர்
குமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்தவர் பாஸ்டின் (வயது48). இவருக்கு சொந்தமான விசைப்படகில் ேகரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுனில் (41) மற்றும் குமரி, பாண்டிச்சேரி, ஆந்திராவை சேர்ந்த 16 மீனவர்கள் கடந்த 21-ந் தேதி மாலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் மறுநாள் கரையில் இருந்து 50 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த சுனிலை காணவில்லை. அவர் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் சுனிலை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். கடந்த 4 நாட்கள் கடலில் தங்கியிருந்து தேடியும் சுனிலை கண்டுபிடிக்க முடியவில்லை.
போலீசில் புகார்
இதனால் மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். பின்னர் இதுகுறித்து விசைப்படகு ஓட்டுனர் வர்கீஸ் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலில் மாயமான சுனிலுக்கு பேபி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மீனவர் கடலில் மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.