சைக்கிள் கடையில் மது விற்றவர் கைது


சைக்கிள் கடையில் மது விற்றவர் கைது
x

சைக்கிள் கடையில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் நம்பம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நம்பம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார்(வயது 49) என்பவர் அவரது சைக்கிள் கடையில் மது விற்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story