விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம்


விவசாயிகள் பயிர்க்கடன் பெறலாம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன் அடையும் வகையில் மொத்தம் உள்ள 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன்கள் அதிகஅளவில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 5,869 புதிய உறுப்பினர்கள் உள்பட 20,878 உறுப்பினர்களுக்கு ரூ.108.30 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

இதேபோல நடப்பு ஆண்டு ரூ.300 கோடி பயிர்க்கடனும், ரூ.300 கோடி கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 20,076 உறுப்பினர்களுக்கு ரூ.121.75 கோடி பயிர்க்கடனும், 5,005 உறுப்பினர்களுக்கு ரூ.70.47 கோடி, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு கடனும் வழங்கப்பட்டு உள்ளது.

பயிர்க்கடன் வழங்குவதற்கு தற்போது மிக குறைந்த காலமே உள்ளதால் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராகி விரைவில் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம்.

பராமரிப்பு கடன்

இதன்படி ஒரு ஏக்கருக்கு நெற்பயிருக்கு பாசன விவசாயம் ரூ.26,300, மானாவரி ரூ.23,400, பருத்தி பயிருக்கு பாசனம் ரூ.22,050, மானாவரி ரூ.13.900, மிளகாய் பயிருக்கு பாசனம் ரூ.27,950, மானாவரி ரூ.21,800, தென்னைக்கு ரூ.22,000 பயிர்க்கடனாக வழங்கப்படுகிறது.

இதேபோல விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு மாடு ஒன்றுக்கு ரூ.14,000, ஆடு ஒன்றுக்கு ரூ.1,650 கால்நடை பராமரிப்பு கடனாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயனடையலாம்.

புகார்

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். பரமக்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 88703 52220 என்ற எண்ணிலும், போகலூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 75503 43249, கமுதி வட்டாரம் 77081 85419, கடலாடி வட்டாரம் 94435 76159, நயினார் கோவில் வட்டாரம் 90951 14291 , முதுகுளத்தூர் 94872 13528, ராமநாதபுரம் 99522 06840, மண்டபம் 94430 65821, திருப்புல்லாணி 83001 71459, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் 88386 68780 என்ற எண்ணிலும், ராமநாதபுரம் மற்றும் சரக துணை பதிவாளரை 73387 21602 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.


Related Tags :
Next Story