பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x

பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் குண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு பூக்கள் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளுக்கும், பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் 1 கிலோ குண்டுமல்லி ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும், அரளி ரூ.200-க்கும், ரோஜா ரூ.250-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.300-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது. திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story