மகாராஜேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்


மகாராஜேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
x

வள்ளியூர் அருகே மகாராஜேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில், சாஸ்தா கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் நடக்கும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக காலையில் தென்கரை மகாராஜேஸ்வரருக்கு சிறப்பு கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்பு 10.40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேக பூஜையும், மதியம் கும்பாபிஷேக தீபாராதனை பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

8-ம் திருநாளான வருகிற 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இரவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து குதிரையில் வன்னிக்குத்து நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான வரும் 5-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதனை தொடர்ந்து குதிரை ஓட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கோபாலன், தக்கார் லதா, செயல் அலுவலர் பொன்னி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story