காவேரிப்பட்டணம் அருகேஏரியில் ஆண் பிணம்


காவேரிப்பட்டணம் அருகேஏரியில் ஆண் பிணம்
x
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சூரிய நாராயணன் ஏரியில் 37 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஏரியில் மிதந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதையடுத்து போலீசார், அந்த நபரின் உடலை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த நபர் ஏரியில் மூழ்கி இறந்தாரா? அல்லது அடித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசப்பட்டாரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story