பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது


பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது
x

பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

மதுரை

மேலூர்

மேலூரில் உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்த திலீப்குமார் மனைவி வசந்தி (வயது 40). இவர் மேலூரில் பஸ் நிலையம் அருகே பழங்கள் வியாபாரம் செய்துள்ளார். இவரிடம் ஒக்கப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழங்கள் வாங்கியது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வசந்தியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிய பாலமுருகனை மேலூர் போலீசார் கைது செய்தனர். காயமடைந்த வசந்தி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.


Related Tags :
Next Story