மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி
x

வேலூரில் மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலியானார்.

விழுப்புரம்

வேலூர்

வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 75). இவர் வேலூர் கொணவட்டத்தில் உள்ள தனியார் பஸ்நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். சுப்பிரமணி நேற்று அதிகாலை 5 மணியளவில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கொணவட்டம் நோக்கி நடந்து சென்றார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கருகம்புத்தூர் மேம்பாலம் அருகே கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.



Related Tags :
Next Story