பவானி அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்து பெயிண்டர் தற்கொலைபெற்றோர், தங்கை இறந்த துக்கம் தாங்காமல் விபரீத முடிவு


பவானி அருகேஅளவுக்கு அதிகமாக மது குடித்து பெயிண்டர் தற்கொலைபெற்றோர், தங்கை இறந்த துக்கம் தாங்காமல் விபரீத முடிவு
x
தினத்தந்தி 9 Aug 2023 9:10 PM GMT (Updated: 9 Aug 2023 9:14 PM GMT)

பவானி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்து பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டாா்

ஈரோடு


பவானி அருகே பெற்றோர், தங்கை இறந்த துக்கம் தாங்காமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

பெயிண்டர்

பவானி அருகே உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியைச் சேர்ந்தவர் துரைசாமி. அவருடைய மகன் பாலதண்டாயுதபாணி (வயது 35). பெயிண்டர். திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுக்குள் இவரின் பெற்றோர், தங்கை ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பாலதண்டாயுதபாணி தனியாக வசித்து வந்தார். யாருடனும் அதிகமாக பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததாக தெரிகிறது.

வீட்டுக்குள் பிணம்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வீட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தூங்க சென்றார். அதன்பின்னர் அவரை காணவில்லை. இதனால் நண்பர்கள் அவரை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது.

உடனே இதுகுறித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாலதண்டாயுதபாணி பிணமாக கிடந்தது தெரியவந்தது.

தற்கொலை

அதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 'பெற்றோர், தங்கை இறந்த துக்கம் தாங்காமல் பாலதண்டாயுதபாணி அளவுக்கு அதிகமாக மது குடித்து தற்கொலை செய்து கொண்டார்' என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story