சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x

சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

மதுரை

அழகர்கோவில்,

அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில்.. இங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறந்து நேற்று எண்ணப்பட்டது. இதில் ரூ.20 லட்சத்து 90 ஆயிரத்து 674-ம், தங்கம் 22 கிராமும், வெள்ளி 870 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டு பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வரப் பெற்றிருந்தது. உண்டியல் திறப்பின் போது துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story