காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி


காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி
x

காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.

கரூர்

கரூர் வடக்கு பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது 75). இவரது மனைவி சின்னப்பொண்ணு (67). இவர்கள் 2 பேரும் நேற்று லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பொன்னம்பலம் தண்ணீர் மூழ்கினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஆற்றில் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொன்னம்பலத்தை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொன்னம்பலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story