நாறும்பூநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்


நாறும்பூநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
x

பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அடுத்துள்ள பழவூரில் அமைந்துள்ள ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பழவூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். திருவிழாவில் தினமும் கும்பாபிஷேகம், சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பக்த பேரவையினர் செய்து வருகின்றனர்.


Next Story