பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் அவதி


பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் பயணிகள் அவதி
x

சோளிங்கர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளளால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளளால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆக்கிரமிப்பு கடைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் நகராட்சிக் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. வாடகைக்கு கடை எடுத்து நடத்தி வருபவர்கள் பயணிகள் அமர்வதற்காக வைக்கப்பட்டிருந்த இருக்குகளை அகற்றிவிட்டு அதில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் வெயில், மழை காலங்களில் பொதுமக்கள், பயணிகள் அமர்வதற்கோ, நிற்பதற்கோ கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பயணிகளுக்கு பயன்படும் வகையில் இருக்கை பொருத்த வேண்டும்.

நடவடிக்கை

மேலும் ஆக்கிரமிப்பு செய்யும் கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

பஸ் நிலையத்தில் ஆக்ரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Related Tags :
Next Story