தோட்டத்துக்குள் புகுந்த முயலை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


தோட்டத்துக்குள் புகுந்த முயலை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x

வடமதுரை அருகே வனப்பகுதியில் இருந்து தோட்டத்துக்குள் புகுந்த முயலை சமைத்து சாப்பிட்டவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள இடையகோட்டை ஊராட்சி சக்காநாயக்கனூரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 36). கடந்த 31-ந்தேதி, இவருடைய தோட்டத்துக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய முயல் ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட குமரேசனின் வளர்ப்பு நாய், முயலை பிடித்து கடித்து கொன்றது. இதனையடுத்து முயல் இறந்தது குறித்து, வனத்துறையினருக்கு குமரேசன் தகவல் தெரிவிக்காமல் முயல் இறைச்சியை சமைத்து சாப்பிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் தர்மராஜ் ஆகியோர் குமரேசனிடம் விசாரணை நடத்தினர். அதில் குமரேசன் முயல் இறைச்சியை சமைத்து சாப்பிட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவருக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



Related Tags :
Next Story