பாலை சாலையில் கொட்டி கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம்


பாலை சாலையில் கொட்டி கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம்
x

பாலை சாலையில் கொட்டி கறவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி

தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் முசிறி - துறையூர் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாநில இணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் கொட்டி ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42-ம், எருமை பாலுக்கு ரூ.51-ம் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் சங்கங்களில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும், ஆவின் பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ பார்முலா தரத்தை அமல்படுத்த வேண்டும், ஆவினுக்கு பால் வழங்கும் கறவை இனங்களுக்கு 50 சதவீதம் மானிய விலையில் கால்நடை அடர் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Related Tags :
Next Story