தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

தூத்துக்குடியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் மின்மாற்றி கட்டமைப்பை மாற்றி அமைக்கும் பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் 10, 11, 12-வது தெரு, கே.வி.கே.நகர், டூவிபுரம் 5 முதல் 10-வது தெரு வரை உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.


Next Story