அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தியதாக வாலிபர் போக்சோவில் கைது


அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தியதாக   வாலிபர் போக்சோவில் கைது
x

அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

மாணவி கடத்தல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த இவரை காணவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த தனபால் (வயது 23) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாணவியையும், தனபாலையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் பவானியில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர்.

போக்சோவில் வாலிபர் கைது

பின்னர் தனபாலிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவரை மேல்விசாரணைக்காக பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு போலீசார் விசாரித்து மாணவியை கடத்திய குற்றத்துக்காக தனபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.



Next Story