லால்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


லால்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

லால்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக லால்குடி இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை லால்குடி நகர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரிநகர், சாந்திநகர், நன்னிமங்கலம், பூவாளூர், பின்னவாசல், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story