தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வுமையம் தகவல்


தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வுமையம் தகவல்
x

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story