தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

04-04-2023 முதல் 05-04-2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06-04-2023 முதல் 08-04-2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றுக் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்காம எச்சரிக்கை: ஏதுமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story