சூளகிரி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


சூளகிரி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Jun 2023 7:45 PM GMT (Updated: 20 Jun 2023 4:20 AM GMT)
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி ஒன்றியம் பன்னப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட முதுகுறுக்கி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில், சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பாபு என்ற வெங்கடாசலம், துணை செயலாளர் சின்ன அப்பையா, அவைத்தலைவர் முனிசந்திரப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்/


Next Story