பெயிண்டர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் திருட்டு


பெயிண்டர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் திருட்டு
x

வாலாஜா அருகே பெயிண்டர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த கோவிந்தராஜபுரம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கஜேந்திரன் (வயது 32). தலங்கை ெரயில் நிலையத்தில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி, மகள்களுடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்கி உள்ளார். காலையில் கீழே இறங்கி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது மேசை டிராயரில் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து வாலாஜா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story