தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு  ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 23 Dec 2022 10:58 AM GMT (Updated: 23 Dec 2022 11:00 AM GMT)

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்குப்பின் ஜனவரி 5--ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆணையர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4-ம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story