அமெரிக்கா, சிங்கப்பூரில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்கா, சிங்கப்பூரில் இருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படதாக நிலையில், வெளிநாடுகளில் இருந்து மதுரை திரும்பியவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரை திரும்பியவர்கள் என்றும் கூறப்படுகிறது. கொரோனா பாதித்த சிலர் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்றவர்கள் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்களின் மாதிரிகள், மரபனு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story