நாகூரில் சாலையில் ெபருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் அகற்றப்பட்டது


நாகூரில் சாலையில் ெபருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் அகற்றப்பட்டது
x

நாகூரில் சாலையில் ெபருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் அகற்றப்பட்டது

நாகப்பட்டினம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நாகூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர் அகற்றப்பட்டது.

நாகூர் தர்கா

நாகையை அடுத்த நாகூரில் உலகப்பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். தர்காவிற்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பெரிய கடைத்தெரு உள்ளது. இந்த கடைத்தெருவில் 75-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த பெரிய கடைத்தெருவில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

கழிவு நீர் அகற்றம்

இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்பவர்கள் மூக்கைப்பிடித்தபடி செல்ல வேண்டி நிலை இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய கடைத்தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி படத்துடன் 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாகை நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார் ஊழியர்களை உடனடியாக அழைத்து பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை அகற்றி சரி செய்தனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்ைக எடுத்த நாகை நகராட்சி அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி கூறினர்.


Next Story