சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை


சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
x

பிரதோஷத்தையொட்டி சக்திமலை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது

நீலகிரி

கோத்தகிரி

ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி கோத்தகிரி சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாக பூஜை, மாலை 3 மணிக்கு சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்து, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.


Next Story