சென்னை விமான நிலையத்தில் படிக்கட்டுகளுடன் அதிநவீன தீயணைப்பு மீட்பு வாகனம்


சென்னை விமான நிலையத்தில் படிக்கட்டுகளுடன் அதிநவீன தீயணைப்பு மீட்பு வாகனம்
x

சென்னை விமான நிலையத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அதிநவீன தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அவசர காலங்களில் விமானங்களில் உள்ள பயணிகளை மீட்பதற்காகவும், தீயை அணைக்கவும் படிக்கட்டுகளுடன் அதிநவீன கருவிகள் கொண்ட தீயணைப்பு வாகனம் கொல்கத்தா விமான நிலையத்தில் மட்டும் உள்ளது.

தற்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் படிக்கட்டுகளுடன் கூடிய அதிநவீன தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உயரமான இடங்களுக்கும், கட்டிடம் இல்லாமல் விமானங்களில் ஏற்படும் தீயை அணைத்து, அதில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக இந்த வாகனத்துக்கு மாற்றி, படிக்கட்டுகள் மூலம் கீழே இறக்குவதற்கும் இதில் வசதிகள் உள்ளன.

இந்த வாகனத்தில் தண்ணீர் தொட்டி, தீயை அணைப்பதற்கான நுரை சேமிப்பு தொட்டியும் உள்ளது. போயிங் 747, ஏர்பஸ் 350 போன்ற பெரிய ரக விமானங்களிலும் திடீரென தீ போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் இந்த வாகனம் மூலம் உடனடியாக தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாகனம் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு துறை மூலம் பயன்பாட்டுக்காக விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தொடங்கி வைத்தார்.


Next Story