சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 100 ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற பக்தர்கள் எதிர்பார்ப்பு


சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 100 ஆண்டுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற பக்தர்கள் எதிர்பார்ப்பு
x

ஆரணி கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் உருவாக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்த புதிய தேர் வெள்ளோட்டத்துக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் உருவாக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடத்த புதிய தேர் வெள்ளோட்டத்துக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தேரோட்டம்

ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கோவிலில் உலா வந்த மரத்தேர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் சேதம் அடைந்தது.

பக்தர்கள் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசின் சார்பில் ரூ.18 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு மக்கள் பங்களிப்புடன் ரூ.34 லட்சம் மதிப்பில் தேர் முடிவு செய்ய பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற வேண்டும். அதன் பின்னர் தான் பிரம்மோற்சவ திருத்தேர் திருவீதி உலா நடைபெறும். செப்டம்பர் மாதம் 27-ந் தேதி புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது 7-ம்நாள் அக்டோபர் 3-ந் தேதி தேரோட்டம் உலா நடைபெற வேண்டும்.

வெள்ளோட்டம்

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டம் துறை அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பிறகு தான் வெள்ளோட்டம் நடைபெறும் என்பதால் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் பிரம்மோற்சவ விழாவுக்கு முன்னதாகவே நடைபெற வேண்டும் என்றும் அறநிலைய துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



Next Story