விஷ பூச்சி கடித்து மாணவி சாவு


விஷ பூச்சி கடித்து மாணவி சாவு
x

வந்தவாசி அருகே விஷ பூச்சி கடித்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள கீழ்குவளைவேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். அவரது மனைவி சுகாசினி. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் அனுஷ்கா (வயது 9) கீழ்குவளைவேடு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

சம்பவத்தன்று அனுஷ்கா இரவு சாப்பிட்டு விட்டு பெற்றோருடன் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினாள். நள்ளிரவில் அனுஷ்காவை விஷ பூச்சி கடித்ததாக தெரிகிறது. இதனால் மாணவி வாயில் நுரை தள்ளியபடி துடித்துக் கொண்டிருந்தாள்.

அவளை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி அனுஷ்கா பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story