விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்


விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
x

ஜோலார்பேட்டை அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே கலந்தரா ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஷ்தி என்ற விவசாய திருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சி துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொறியியல் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்மை இடுபொருட்களை ஒன்றியக்குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வழங்கினார். இதில் அட்மா திட்ட தலைவர் சரவணன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மேரி வீனஸ், வேளாண்மை உதவி அலுவலர் அனிதா, ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் துறை அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story