பெண் கிடைக்காத விரக்தியில் எலக்ட்ரீசியன் தற்கொலை


பெண் கிடைக்காத விரக்தியில்  எலக்ட்ரீசியன் தற்கொலை
x

பெண் கிடைக்காத விரக்தியில் எலக்ட்ரீசியன் தற்கொலை

கிருஷ்ணகிரி

பர்கூர்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா பெருமாள் பேட்டை அருகே உள்ள வேப்பமர சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் பர்கூர் அருகே சிகரலபள்ளி அடுத்த தம்மகவுண்டனூர் கிராமத்தில் தங்கி இருந்தார். இவருக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கப்பட்டது. ஆனால் சரியான பெண் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த சுரேஷ் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story