தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா..!


தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா..!
x

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். ராஜினாமா முடிவை தமிழக அரசிடமும், முதல்-அமைச்சரிடமும் சண்முகசுந்தரம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பொறுப்பில் இருந்து விலகி சண்முகசுந்தரம் தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாக கூறப்படுகிறது.

1989-1991ல் திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றினார். 1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்தார். 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம்.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.


Next Story