இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திமிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ஆயிரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.

இவரது மனைவி சுஜிதா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 4 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சுஜிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story